www.kurungudi-valli.blogspot.com

புதன், ஜூன் 24, 2020

1950s பழைய பாடல்களின் இனிமையும் சுசீலாம்மாவின் குரலும்

இசை கேட்டு உய்வோம்

பழைய பாடல்களின்  இனிமையும்  சுசீலாம்மாவின் குரலும் 

யார் பையன் படம் இப்பவும் ரசிக்கலாம். ஒரு குழந்தையின் தேடல் படம் முழுக்கப் 
பலரின்  வாழ்க்கையைத் தொட்டுச் செல்கிறது.
காதலர்களை இணைக்கிறது.

பண்பட்ட நடிப்பு.
துளி விரசம் கிடையாது.
நகைச்சுவைக்கு என் எஸ் கே மதுரம் ஜோடி.

இந்தச் சுட்டிப் பையனின் நடிப்பு 
படம் முழுக்க நம்மைக் கட்டிப்போடும்.
டெய்ஸி இரானி  பையன் வேடத்தில்  ஜமாய்ப்பார்.
அவர் ஆட்டுவிக்கும் பெரியவர்கள் அடிபணிந்துதான் 
போக வேண்டும். சுவையான பாடல்களை எழுதியவர் 
மருதகாசி. இசை ஜி.தக்ஷிணாமூர்த்தி.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் அம்மா...

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஆமாம் அன்பு தனபாலன்.
அந்தக் குழந்தையும் சாவித்ரிம்மாவும்
எப்படி இழைந்து நடித்திருக்கிறார்கள்.
படம் ,பாடல்,இசை அனைத்துமே இனிமை. நன்றி ராஜா.