www.kurungudi-valli.blogspot.com

ஞாயிறு, ஜூன் 21, 2020

எண்ணங்கள் எழுத்துக்கள்

வல்லிசிம்ஹன் 


எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

எண்ணங்கள் எழுத்துக்கள் 


பலவேறு உத்திகளை  கடைபிடித்து  பாசிட்டிவ் 

எண்ணங்களை வளர்க்க  இந்த நேரத்தைத் 


தாண்டி வரவேண்டி  இருக்கிறது.

சென்னையிலிருந்து   ஏதாவது   நல்லவை அல்லாத செய்தி வரக்கூடாது 

என்றே பிரார்த்தனை.

மாற்றிச் சொல்ல  வேண்டுமானால் நல்ல செய்திகளுக்காக காத்திருக்கும் நேரம்.


கடைப்பிடிக்கும் வழிகள், நல்ல சமையல், 

கேட்க  நல்ல இசை, படிக்க நல்ல புத்தகங்கள்,

பிரார்த்தனை   தொடர்ச்சியாக ஒலிக்கும் ஒலி .


எழுத, படிக்க என்று உட்கார்ந்து விட்டால் 

காலில் வீக்கம் வந்து விடுகிறது.

என்னால் மற்றவர்களுக்கு கவலை.


இதைத் தவிர   வேறென்ன செய்ய முடியும் 

என்று  யோசித்த போது ,

தோன்றிய  எண்ணம்,

இசைக்காக ஒரு பதிவு வைத்துக் கொள்ளலாம்.


பாடலைப் பதிந்து கொண்டு என்  நாச்சியார் பதிவில் 

அதைப் பற்றி எழுதாவிட்டால் 

எதோ தவறாகச் செய்த  மனப்பான்மை 

பாதிப்பு வருவதால், 

என் பழைய வலைப்பூ குறுங்குடி வல்லியைத் 

தூசி தட்டி,  திரை இசை எல்லா வகைகளும் ,

என் வாழ்வில் வெவ்வேறு அங்கம் வகித்த நேரங்களில் என்னுடன் துணை வந்த பாடல்களை 

பதிய ஆரம்பித்தேன்.


இது தனிப்பட்ட செல்வம்.  காதுகள் செயல் படும் வரை கேட்கலாம்.


இனிதான் செம்மையாக அமைக்க வேண்டும்.


''எனக்குப் பிடித்த  பாடல்  அது உனக்கும் பிடிக்குமே''

என்று  சொல்ல வரவில்லை.:)


முடிந்த போது  யாரும் கேட்கலாம்.

இது இப்போதைய தேவை எனக்கு.


சோர்ந்து போக விரும்பவில்லை.

அவசியமில்லாத  பயமுறுத்தும்  காணொளி 

காண விருப்பம் இல்லை.

எல்லோரும் தொலைக் காட்சிகள், செய்தி தாள்களைப்  படிக்கிறோம் .

நாம் சொல்லித்தான் யாருக்கும் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதனால் செய்தி வீடியோக்களை பதிய ப் 


போவதில்லை. இந்த புத்தி வர இத்தனை நாட்கள் ஆயிற்று.

இதோ  மருந்து கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.


வந்து விடுவோம். இறை வழி காட்ட  நாமும் மீளுவோம்.


அவனே காப்பான்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


இதோ என் புதிய பழைய தளம் இசைக்காக.

www.kurungudi-valli.blogspot.com.







2 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

செந்தூர் முருகன் பாடல் பிடித்த பாடல். கேட்டு ரசித்தேன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

அன்பு கோமதி,
வருகைக்கும் ரசித்ததற்கும் மிக நன்றி மா.